×

கவுன்சிலர் கூட ஜெயிக்கல… இதுல பிரதமர் ஆசை வேற…. ஐயா… ஐயான்னு… அண்ணாமலை லேகியம் விற்குறாரு…

* முட்டா பையனுக்கு எதுவுமே தெரியல

* 50 பேர சம்பளத்துக்கு வெச்சா தலைவனா?

* நீ வேட்டியை கழட்டிட்டுதான் ஓடணும்

* கிழித்து தொங்க விட்ட உதயக்குமார்

மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது: இரட்டை இலை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் பேசி வருகிறார். அவருக்கு மன குழப்பத்துடன் மூளை குழம்பியுள்ளது. அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜவுடன் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும், தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. நாங்க ரத்தத்த கொடுத்து, உயிரை கொடுத்து வளர்க்க கூடியது அதிமுக. இதை அழிக்க அண்ணாமலை அல்ல.. அங்க அப்பனே வந்தாலும் முடியாது.

இது 2 கோடி தொண்டர்களின் எச்சரிக்கையா சொல்றேன். சும்மா பூச்சாண்டி காட்டுறது. இந்த ஐயங்குறது இதெல்லாம். என்ன நீ எங்க இருந்த, எங்க வந்த, எங்க போன. உன்னோட வரலாறு என்ன. நீ என்னமோ இந்த நாட்டை காப்பாற்ற பிறந்த மாறி பேசுற. ஒரு அளவு இருக்குடா தம்பி. அதனால கொஞ்சம் பார்த்து பேசு. நிதானமா பேசு. நாங்கள்லாம் பேச ஆரம்பிச்சோம் வெச்சுக்கோ வேஷ்டியை கழட்டிட்டு நீயெல்லாம் ஓடிடணும். நாங்கள்லாம் கட்சிக்கு கட்டுப்பட்டும், எடப்பாடிக்கு கட்டுப்பட்டும் பேசமா உட்காந்து இருக்கோம்.

அண்ணாமலைக்கு பதில் சொல்ல எங்களுடைய கடைகோடி தொண்டன் போதும். அவன் பேசுறது பாருங்க சகிக்க முடியல. லேகியம் விற்குறா மாறி இருக்கு. ஐயா.. ஐயா.. இது நடந்துடுச்சு ஐயா… ஐயா… இப்படி போச்சு ஐயா… இந்த லேகியம் சாப்பிடுங்க ஐயா.. காலையில உங்களுக்கு காய்ச்சல் சரி ஆகலனா, மாலையில் வாங்க ஐயா… மாலையில் சரி ஆகலனா காலையில வாங்க ஐயா… வாங்க ஐயா… வாங்க ஐயா… வாங்க ஐயா… உடனடியா வாங்க ஐயா.. இல்லைன்னா லேக்கியம் தீர்ந்து விடும் ஐயா…

இதை நீங்கள் பயன்படுத்திக்கலைனா வாய்ப்பு நழுவி போய்விடும் ஐயா… இந்த சந்தர்ப்பத்தில இந்த லேகியத்த விற்கலைன்னா இனிமே விற்க முடியாது ஐயா… இந்த லேக்கியம் உங்களுக்காக தயாரிக்கப்பட்டது ஐயா. நீங்க யாரையும் நம்ப தேவையில்லை. நான் சொல்றேன் நீங்கள் சாப்பிடுங்க.. செத்தா வந்து பார்க்காதீங்க ஐயா… உயிரோட இருந்தா வந்து பாருங்க ஐயா… இப்படி பேசுறான் அந்த ஆளு. எதுவும் தெரியாத காலையில எழுந்து வந்து வாய்க்கு வந்தத பேசுறான். அதிமுக வலிமை தெரிந்துதான் டெல்லியில இருக்க தலைவர்கள் அழைப்பு விடுக்குறாங்க. இந்த முட்டா பையனுக்குதான் எதுவுமே தெரியலேயே.

எதுவுமே தெரியாதவன் எப்படி பேசுவான். என்னமோ இவன்தான் தமிழ்நாட்ட காக்க வந்தா மாறி. ஒன்னுமே இல்லைங்க.. பூஜ்ஜியம். ஒரு 50 பேர சம்பளத்துக்கு வெச்சுக்கிட்டு சமூக வலைதளங்களில போட்டுக்கிட்டா தலைவராகிடுவீயா. நீ இன்னும் கவுன்சிலராகக் கூட ஜெயிக்கல. அதுக்குள்ள பிரதமர் ஆகிடுவீயா. அரசியல் அனுபவம் அவனுக்கு இல்ல. தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். பொறுமைக்கு ஒரு அளவு இருக்கிறது. அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பாஜ தவிர எந்த கட்சி வந்தாலும் தாய் உள்ளத்தோடு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கவுன்சிலர் கூட ஜெயிக்கல… இதுல பிரதமர் ஆசை வேற…. ஐயா… ஐயான்னு… அண்ணாமலை லேகியம் விற்குறாரு… appeared first on Dinakaran.

Tags : Iannu ,Annamalai Legyam ,Udayakumar ,Madurai ,Former Minister ,AIADMK ,
× RELATED தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!!